பரிஸ் : கட்டிடத்தில் இருந்து விழுந்த - இரண்டு வயது இரட்டையர்கள்!!
12 வைகாசி 2025 திங்கள் 07:23 | பார்வைகள் : 12536
இரண்டு வயது இரட்டைக் குழந்தைகள் முதலாவது தளத்தில் இருந்து விழுந்துள்ளனர். அவர்களது பெற்றோர்கள் வீட்டில் இருந்துள்ள போதும், அவர்களது கண்பார்வையில் இருந்து விலகி, தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று மே 11, ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 9.30 மணி அளவில் இரு குழந்தைகள் முதலாவது தளத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளதாக அவசரப்பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். அதிஷ்ட்டவசமாக அவர்களது உயிருக்கு ஆபத்துக்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இருவரையும் மீட்டு 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். குழந்தைகளில் ஒருவர் உயிராபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan