பெண் அடித்துக் கொலை.. - கணவர் கைது!!

10 வைகாசி 2025 சனி 13:13 | பார்வைகள் : 3902
பெண் ஒருவர் கட்டிவைத்து அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரிசின் புறநகர் பகுதியான Chevilly-Larue (Val-de-Marne) நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு கொல்லப்பட்டுள்ளார். 'சலோடேப்' பட்டியினால் அவர் கழுத்து கை கட்டப்பட்டு, தலையில் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை. அவரை கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டு அவரது கணவர் கைது செய்யப்பட்டார். அவர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்து தற்கொலைக்கு முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1