சமாதானத்திற்காக போராட்டம் தொடரும்....இம்மானுவேல் மக்ரோன்!

9 வைகாசி 2025 வெள்ளி 15:21 | பார்வைகள் : 7968
இரண்டாம் உலகப் போரின் 80 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பரிசில் நேற்றைய தினம் நடைபெற்ற நினைவூட்டல் விழாவில், "நாம் சமாதானத்திற்காக போராட்டத்தை ஒருபோதும் நிறைவு செய்ய முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நமது நாட்டின் இலட்சியங்கள், சுதந்திரம், விடுதலை மற்றும் பலமான ஐரோப்பாவை பாதுகாக்கும் முயற்சி தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார். ஜெர்மனியின் சரணடைவுக்குப் பிறகு, 1945 மே 8ம் தேதியின் நினைவாக இந்த விழா நடைபெற்றது.
இந்நிகழ்வு உக்ரைனில் நடைபெறும் போரின் மத்தியில், ஐரோப்பாவில் மீண்டும் போரின் அச்சுறுத்தல் உருவாகும் சூழலில் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு விழா புதிய வடிவில், பிற்பகலில் நடைபெற்றது, மேலும் “சமாதான இசை நிகழ்ச்சி” நேற்று இரவு பிரபல இசைக்கலைஞர்களுடன் நடைபெற்றது.
இம்மானுவேல் மக்ரோன், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நிலவிய 'நிரந்தர சமாதானம்' என்ற நம்பிக்கை ஒரு மாயை எனவும், தற்போதைய சூழ்நிலை அதை நிரூபிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1