La Courneuve இல் 17 வயது இளைஞர் தாக்கப்பட்டார்!!
15 சித்திரை 2025 செவ்வாய் 16:16 | பார்வைகள் : 10699
Seine-Saint-Denis பகுதியில் உள்ள La Courneuve நகரில், "la cité des 4 000" என்ற குடியிருப்புப் பகுதியில் 17 வயதான இளைஞன் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு கோமாவில் இருக்கிறார். இந்த சம்பவம் ஏப்ரல் 12 அன்று இடம்பெற்றுள்ளது.
இளைஞன் மீது தாக்குதல் நடத்தியவர்கள், அவரை அடித்து, காயப்படுத்தி, பின்னர் தப்பிச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது கோமாவில் உள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் இந்த தாக்குதலை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலின் காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.



