Paristamil Navigation Paristamil advert login

யாழில் கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழில் கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

8 சித்திரை 2025 செவ்வாய் 08:30 | பார்வைகள் : 1422


யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

வடமராட்சி , அல்வாய் பகுதியை சேர்ந்த பிரபாகரன் பிரணவன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

மந்திகை பகுதியில் கடந்த சனிக்கிழமை, இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை  உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்