தாயகம் திரும்பிய 45 உக்ரைனியர்கள்….! ரஷ்யா, பெலாரஸில் இருந்து பாதுகாப்பாக மீட்பு
7 சித்திரை 2025 திங்கள் 09:37 | பார்வைகள் : 3885
45 உக்ரைனிய குடிமக்கள் வெற்றிகரமாக மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.
உக்ரைன் தனது 45 குடிமக்களை ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பிரதேசங்களில் இருந்து வெற்றிகரமாக மீட்டெடுத்து தாயகம் திரும்ப செய்துள்ளது.
மீட்கப்பட்ட இந்த குழுவில், கடுமையான உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய பல உக்ரைனியர்கள் உள்ளனர்.
குறிப்பாக, 93 வயதுடைய மூதாட்டி ஒருவர் தாயகம் திரும்பியது மிகுந்த நிம்மதியையும் மனிதாபிமானத்தின் வெற்றியையும் எடுத்துக்காட்டுகிறது.
நீண்ட மற்றும் துன்பகரமான பயணத்தின் விளைவாக, தாயகம் திரும்பிய பல உக்ரைனியர்கள் தங்களுடைய அடையாள ஆவணங்களை இழந்துள்ளனர்.
தங்கள் அடையாளத்தை மீண்டும் நிறுவுவதற்கும், தேவையான சட்ட நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் தற்போது இவர்களுக்கு விரிவான சட்ட உதவி தேவைப்படுகின்றன.
மேலும், ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உக்ரைனியர்கள் அனுபவித்த கொடுமையான சூழ்நிலைகளை இந்த மீட்பு நடவடிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
மீட்கப்பட்ட குடும்பம் ஒன்று, ரஷ்ய படை வீரர்களால் கொல்லப்பட்ட தங்கள் தந்தையின் இழப்பை தாங்கிக் கொண்டு தாயகம் திரும்பி வந்துள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan