பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நிலநடுக்கம்

5 சித்திரை 2025 சனி 10:54 | பார்வைகள் : 1011
பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 04.04.2025 ஏற்பட்டுள்ளதுடன் இது ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியுள்ளது.
பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் பின்னர், அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
தற்போது, இந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.