Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்போம்.. ஜனாதிபதி மக்ரோன்!!

ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்போம்.. ஜனாதிபதி மக்ரோன்!!

29 சித்திரை 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 16183


ரஷ்யா மீது வைக்கப்படும் அழுத்தத்தை மேலும் அதிகரிப்போம் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் இரு வாரங்களில் ரஷ்யா போர்நிறுத்துக்கு உடன்பட வைப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் தெரிவித்துள்ள நிலையில், கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு கருத்தையே ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.  "அடுத்த எட்டு முதல் பத்து நாட்களில், ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிப்போம்" என அவர் தெரிவித்தார்.

சனிக்கிழமை வாடிகனில் வைத்து ட்ரம்ப்-மக்ரோன் - செலன்ஸ்கி ஆகிய மூவரும் சந்தித்துக்கொண்டனர். அதன்போது போர்நிறுத்தத்துக்கான அழுத்தத்தை அமெரிக்கா மீது ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. அதை அடுத்தே இந்த அறிக்கையை மக்ரோன் வெளியிட்டுள்ளார்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026