Paristamil Navigation Paristamil advert login

தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்லாமியருக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்!!

தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்லாமியருக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்!!

28 சித்திரை 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 3084


பள்ளிவாசலில் வைத்து தாக்கப்பட்டு கொல்லப்பட்ட Aboubakar எனும் இஸ்லாமியருக்கு நீதிகேட்டு நேற்று ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டம் Place de la République பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இதில் பங்கேற்றன. பல நூறு பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் Aboubakar க்கு நீதி கேட்டு குரல் எழுப்பினர்.
 

Gard மாவட்டத்தின் La Grand-Combe பள்ளிவாசலில் வைத்து நபர் ஒருவர் 50 தடவைகள் வெட்டப்பட்டு படுகொலைன்செய்யப்பட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்