Paristamil Navigation Paristamil advert login

பள்ளிவாசல் கொலைக்கு பரிசில் ஒன்றுகூடல்!!

பள்ளிவாசல் கொலைக்கு பரிசில் ஒன்றுகூடல்!!

27 சித்திரை 2025 ஞாயிறு 10:21 | பார்வைகள் : 10057


La Grand-Combe பள்ளிவாசல் படுகொலையில் அல்லாவை ஏளனப்படுத்தியதாக நடந்த கொலைக்கு எதிராக, இஸ்லாமிய எதிர்ப்புவாதத்திற்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் ஒன்று கூடல் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படுகொலையைப் பிரதமர் கண்டித்திருந்தாலும், இன்றைய ஒன்று கூடல் குறித்து மிக அவதானமான இருக்கும்படி உள்துறை அமைச்சிற்குத் தெரிவித்துள்ளார்.

இந்த ஒன்று கூடல் இன்று மாலை குடியரசுச் சதுக்கத்தில் (place de la République) நடக்கும் என சமூகவலைத் தளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய கொலையாளி இன்னமும் அகப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்