தீ விபத்தில் இரு சிறுமிகள் பலி!!

26 சித்திரை 2025 சனி 17:58 | பார்வைகள் : 693
வீடொன்றில் பரவிய தீ விபத்தில் இரு சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். Brumath (Bas-Rhin) நகரில் இச்சம்ப இன்று சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நகன் Alexandre Millerand வீதியில் உள்ள வீடொன்றில் திடீரென தீ பரவியதில், வீட்டுக்குள் இருந்த சிறுமிகள் வெளியேற முடியாமல் சிக்குண்டுள்ளனர். மூன்று சிறுமிகளில் 10 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள் உயிரிழந்துள்ளதாகவும், 7 வயதுடைய மூன்றாவது சிறுமி அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
7 வயதுடைய குறித்த சிறுமி Strasbourg நகர மருத்துவமனை ஒன்றுக்கு உலங்குவானூர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.