Nantes தாக்குதல் : சிகிச்சை பெற்றுவந்த மாணவி பலி!!

25 சித்திரை 2025 வெள்ளி 05:25 | பார்வைகள் : 7897
Nantes நகரில் உள்ள உயர்கல்வி பாடசாலையில் நேற்று நண்பகல் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவர் பலியாகியுள்ளார்.
15 வயதுடைய மாணவர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் குறித்த மாணவி உட்பட மூவர் காயமடைந்திருந்தனர். அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் Bruno Retailleau, தேசிய கல்வி அமைச்சர் Élisabeth Borne ஆகியோர் நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025