இந்தியப் பெருங்கடலிலிருந்து பாப்பரசருக்கு மக்ரோனின் ஆழ்ந்த அஞ்சலி!

24 சித்திரை 2025 வியாழன் 23:03 | பார்வைகள் : 3831
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயணத்தில் இருக்கும் போது, பாப்பரசர் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவர் பாப்பரசரைவை மிகவும் மதித்ததாகவும், மனிதாபிமானம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தின் மீது அவரது உரைகளை நினைவுகூர்ந்தார். பாப்பரசருடன் இருந்த தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் உரையாடல்கள் தனது வாழ்நாளில் மறக்க முடியாதவை எனவும் மக்ரோன் தெரிவித்தார்.
இந்த உரையால், பாப்பரசர் பிரான்சிஸின் பணிகள் மற்றும் அவரது மாறாத நம்பிக்கைகள் மீதான மதிப்பு பிரதிபலிக்கின்றது.
மக்ரோனின் இந்த அஞ்சலி, இரண்டு தலைவர்களுக்கிடையேயான நெருக்கத்தையும் மனிதாபிமானத்தையும், மத மதிப்பீடுகளையும் உலகளாவிய ரீதியில் முன்னிறுத்துகிறது.