ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் பதவி: பரிஸ் மேயர் Anne Hidalgoவிற்கு வாய்ப்பு?
20 சித்திரை 2025 ஞாயிறு 17:41 | பார்வைகள் : 6697
பரிஸ் நகர மேயராக இருக்கும் Parti socialiste கட்சி உறுப்பினர் Anne Hidalgo, 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியலிலிருந்து விலக திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், அவர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் (UNHCR) பதவியில் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாலியரான Filippo Grandi தற்போது அந்த பதவியில் இருந்து வரும் டிசம்பரில் விலக உள்ளார்.
2024 ஒலிம்பிக் போட்டிகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகித்த ஆன் இதால்கோவுக்கு, சர்வதேச அளவில் நல்ல மரியாதை உண்டு. இதைத் தொடர்ந்து, ஐ.நா. உயர்ஸ்தானிகர் பதவிக்கு அவர் "தகுதியானவர்" என பலர் பாராட்டியுள்ளனர். முக்கியமாக, ஜனாதிபதி எம்மானுவல் மக்ரோன் அவருக்கு ஆதரவு அளிக்கிறார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆன் இதால்கோ அந்தப் பொறுப்பை ஏற்க பாரிஸ் மேயர் பதவியை விட்டு விலக வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதற்கான தீர்வுகள் குறித்து பேசப்படும் நிலையில், அவரது துணை மேயர் Patrick Bloche இடைக்கால பொறுப்பை ஏற்கலாம் என தெரிகிறது. ஆனால் நகர மன்ற தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு இன்னும் உறுதி செய்யப்படாததால், இது அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan