Paristamil Navigation Paristamil advert login

காணாமற் போன சிறுவன் - தாய்- சகோதரி - கைது!!

காணாமற் போன சிறுவன் - தாய்- சகோதரி - கைது!!

20 சித்திரை 2025 ஞாயிறு 14:07 | பார்வைகள் : 1492


தொடர்ச்சியாகக் காணமற்போதல் நடந்து வரும் ஏநைnநெ  நகரத்தில் 12 வயதுடைய லியாம் காணமற்போய் 9 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

இதனைத் தொடர்ந்து லியாமின் சகோதரியும் தாயும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சிறுவனை இவர்கள் கொண்டு போய் ஒருவரிடம் ஒப்படைத்து அடைத்துவைக்குமாறு கோரியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறுவனை அடைத்து வைத்திருந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

லியாம் தனது தந்தையிடம் சென்று விடக்கூடாது என்பதற்காகவே அவனை ஒளித்து வைத்ததாகத் தாயார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

வேண்டுமென்றே ஒளித்து வைத்து விட்டு, ஜோந்தார்மினரின் பெரும் சக்தியை வேண்டுமென்றே வீணடித்த, பொய்வாக்குமூலம் கொடுத்த, தாய்க்ககும் சகோதரிக்கும் தண்டனை உறுதி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்