சிறையதிகாரி மீது வெந்நீர் தாக்குதல்!!

19 சித்திரை 2025 சனி 18:44 | பார்வைகள் : 1581
இடைவிடாது தொடரும் சிறைக்கலவரங்கள், தாக்குhல்கள், துப்பாக்கிப் பிரயோகங்கள், வாகனங்களைக் கொழுத்துதல் என்பன தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இதன் அடுத்த கட்டமாக சிறையதிகாரி மீது நேரடித் தாக்குதல் நடந்துள்ளது.
Drôme இலுள்ள வலோன்ஸ் (Valence) சிறைச்சாலையில் ஒரு சிறையதிகாரி மீது கொதிக்கக் கொதிக்க வெந்நீர் ஊற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 17h40 அளவில் நடந்துள்ளது. இந்த இளம் அதிகாரி உடனடியாக அவசரசகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறையதிகாரிகளின் பாதுகாப்பிற்கு உடனயாக உறுதியளிக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, நீதியமைச்சர் ஜெரால்ட் தர்மனன் மற்றும் உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெய்யோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.