சமூகக் கொடுப்பனவுகளை நிறுத்த வேண்டுமா? - கருத்துக்கணிப்பு!!

19 சித்திரை 2025 சனி 07:00 | பார்வைகள் : 2095
பற்றாக்குறையை தீர்க்க வரவுசெலவு திட்டத்தில் €40 பில்லியன் யூரோக்கள் சேமிக்கும் திட்டம் ஒன்றை நோக்கி அரசு ஆலோசித்து வருகிறது. பல துறைகளில் அரசு இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இந்த பற்றாக்குறையை தீர்க்க சமூகநலக்கொடுப்பனவுகளை நிறுத்த வேண்டும் என பெருமளவான பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். CNEWS, Europe 1 மற்றும் JDD ஊடகங்களுக்காக CSA நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 56% சதவீதமான மக்கள் தெரிவித்துள்ளனர்.
43% சதவீதமானவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனைய 1% சதவீதமானவர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.