பிரான்சில் முதன்முறையாக - தொலைபேசி இல்லாத ஒரு நாள்!!

18 சித்திரை 2025 வெள்ளி 15:15 | பார்வைகள் : 2017
தொலைபேசி இல்லாத ஒரு நாளை கடைப்பிடிக்கும் முயற்சி ஒன்று பரிசில் இடம்பெற உள்ளது. ” la première journée sans téléphone de France” எனும் இந்த நிகழ்வு பிரான்சில் முதன்முறையாக கொண்டாடப்பட உள்ளது.
பிரெஞ்சு மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 600 தொடக்கம் 700 வரை தொலைபேசி திரையை தொடுகிறார்கள். திரை நேரம் 6 மணிநேரத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், தொலைபேசி பயன்பாடு தொடர்பிலான விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில், வரும் ஜூன் 22ஆம் திகதி அன்று தொலைபேசிகளை வீட்டில் வைத்துவிட்டு ஒரு பொது இடத்தில் கூடவேண்டும். இதுவே நிகழ்வின் சுருக்கம்.
பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள Quai de Solférino பகுதிக்கு அருகே ஒன்று கூடி அங்கு இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். இந்த நிகழ்வை பரிஸ் நகரசபையும் My little Paris எனும் அமைப்பும் இணைந்து நடாத்த உள்ளது.
சவாலுக்கு நீங்கள் தயாரா?