கடும் எச்சரிக்கையில் கோர்ஸ்!!

17 சித்திரை 2025 வியாழன் 11:43 | பார்வைகள் : 706
பிரான்சின் கோர்ஸ் தீவு வானிலை மையத்தின் எச்சரிக்கைக்குள் வந்துள்ளது.
பாரிய அலைகள் கரையோரங்களைத் தாக்கும் எனவும், மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் பிரான்சின் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் இது தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்திற்கும் அதிகமான புயற்காற்று வீசுவதால் பயங்கர அலைகள் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.