Paristamil Navigation Paristamil advert login

2043-ல் ஐரோப்பாவை ஆளப்போகும் இஸ்லாம்…. பாபா வங்காவின் கணிப்பு

2043-ல் ஐரோப்பாவை ஆளப்போகும் இஸ்லாம்…. பாபா வங்காவின் கணிப்பு

17 சித்திரை 2025 வியாழன் 06:15 | பார்வைகள் : 773


2043-ல் ஐரோப்பாவை இஸ்லாம் ஆளப்போவதாக கூறும் பாபா வங்காவின் கணிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025-ஆண்டு நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், புகழ்பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகள் மீண்டும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.

குறிப்பாக, 2025-ல் ஐரோப்பாவில் பெரும் யுத்தம் வெடிக்கும் என்றும், இது கண்டத்தின் மக்களை பெரிதும் குறைக்கும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1911-ல் பிறந்த பாபா வங்கா, சிறு வயதில் பார்வையை இழந்தார். உலக யுத்த காலங்களில் பிரபலமான அவர், பல முன்கணிப்புகளை நிகழ்த்தியதாக அவரது விசுவாசிகள் நம்புகின்றனர்.

1996-ல் மார்பகப் புற்றுநோயால் உயிரிழந்தார்.
தற்போது, அவரின் கணிப்புகளில் ஒன்று, 2043-ல் ஐரோப்பாவில் முஸ்லிம் ஆட்சி ஏற்படும் என்பதாகும்.

இது ஜேர்மனியை போன்ற நாடுகளில் கிறிஸ்தவர் எண்ணிக்கை குறைவதோடு, இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படும் கலாசார மாற்றங்களைக் குறிக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும், 2299-ல் பிரான்ஸில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக இடம்பெறும் பகிரங்க போர், மற்றும் ஈரானில் தோன்றும் முஸ்லிம் அரசியல் வளர்ச்சி ஜேர்மனிக்கு விரிவடையும் என்ற கூற்றும் அவரது கணிப்புகளில் இடம்பெற்றுள்ளன.

2076-ல் கம்யூனிஸம் மீண்டும் உலகளவில் எழுச்சி பெறும் என்றும், 5079-ல் உலகம் பெரும் இயற்கை பேரழிவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவரது கூற்றுகள் பலரும் விவாதிக்கும் வகையில் உள்ளன. விசுவாசிகள் சில நிகழ்வுகள் உண்மை ஆகியுள்ளன என நம்புகின்றனர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்