Euromillions : €130 மில்லியன் பரிசுத்தொகை!
6 பங்குனி 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 7857
வரும் 7 ஆம் திகதி இடம்பெற உள்ள Euromillions சீட்டிழுப்பில் வெற்றித்தொகையாக €130 மில்லியன் காத்திருக்கிறது.
மார்ச் 7, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற உள்ள மெகா அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றி பெறும் நபர் €130 மில்லியன் யூரோக்களை வெல்ல முடியும் எனவும், அதற்காக 50 இலக்கங்களில் இருந்து 5 சரியான இலக்கங்களையும், 12 இலக்கங்களில் இருந்து இரண்டு நட்சத்திர இலக்கக்களையும் கணிக்க வேண்டும்.
கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிஷ்டசாலி ஒருவர் €52.4 மில்லியன் யூரோக்களை வென்றிருந்தார். மேலும் ஐரோப்பா முழுவதிலும் இருந்து எட்டு நபர்கள் தலா €20,632 யூரோக்களை வென்றிருந்தனர்.
அதேவேளை, கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபரில் பிரெஞ்சு நபர் ஒருவர் €220 மில்லியன் யூரோக்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
****
அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பு தொடர்பில் மக்கள் அவதானமாக இருத்தல் அவசியமானதாகும். இதில் பண இழப்பு, அடிமையாகுதல் போன்ற அபாயங்கள் உள்ளன. உதவிக்கு 09 74 75 13 13 எனும் இலக்கத்துக்கு அழைக்கவும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan