யாழில் வீடொனில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
5 பங்குனி 2025 புதன் 11:07 | பார்வைகள் : 3294
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று புதன்கிழமை (05) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
41 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan