இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44 வீத பரஸ்பர வரி விதிப்பால் நெருக்கடி
3 சித்திரை 2025 வியாழன் 12:02 | பார்வைகள் : 11932
உலக நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 வீத பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
இந்தப் புதிய வரிக் கொள்கையின்படி, அனைத்து இறக்குமதிகளும் 10 சதவீத வரியை உள்ளடக்கியிருக்கும், மேலும் அமெரிக்காவுடன் வர்த்தக உபரியை நடத்தும் நாடுகளுக்கு அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை மீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டு, உலகின் அதிக வரிகளைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
கம்போடியா மீது 49 சதவீத வரியும், வியட்நாம் மீது 46 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷிற்கு 37 சதவீதமும், தாய்லாந்திற்கு 36 சதவீதமும், சீனாவிற்கு 34 சதவீதமும், இந்தியாவிற்கு 26 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 சதவீத வரியை விதித்துள்ளது, மேலும் இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதித் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையில் இருந்து அதிக அளவில் ஆடை ஏற்றுமதி அமெரிக்காவிற்குத்தான் என்று கூறப்படுகிறது, மேலும் இந்த வரிகள் விதிக்கப்படுவது அந்தத் துறைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan