Sevron : ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான வாகனங்கள்.. சாரதி பலி.. போக்குவரத்து தடை!!
2 சித்திரை 2025 புதன் 18:29 | பார்வைகள் : 3988
இன்று ஏப்ரல் 2, புதன்கிழமை Sevron (Seine-et-Marne) நகரில் ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் சாரதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூன்று கனரக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்தை ஏற்படுத்தியுள்ளன.
N104 தேசிய சாலையில் பிற்பகல 1.15 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. Sevron மற்றும் Brie-Comte-Robert நகரங்களை இணைக்கும் வீதியில் பயணித்த கனரக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.
இதில் சாரதி ஒருவர் பலியாகியுள்ளார். ஏனைய இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
விபத்தை அடுத்து இரு பக்க போக்குவரத்துக்களும் நீண்ட நேரம் தடைப்பட்டிருந்தது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan