ஏழாவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன் பலி!!

2 சித்திரை 2025 புதன் 11:37 | பார்வைகள் : 4158
கட்டிடம் ஒன்றின் ஏழாவது தளத்தில் இருந்து விழுந்து 10 வயதுடைய சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் வடகிழக்கு பகுதியான Strasbourg
நகரில் இச்சம்பவம் நேற்று ஏப்ரல் 1, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. Rue de Bâle வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளத்தின் வசிக்கும் சிறுவனே அங்கிருந்து விழுந்துள்ளான். SMUR மருத்துவக்குழுவனர் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்படி சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025