பெண்ணின் சடலம் மீட்பு! - காவல்துறையினரை தாக்க முற்பட்ட கணவன் கைது!!
30 பங்குனி 2025 ஞாயிறு 08:55 | பார்வைகள் : 6206
நேற்று சனிக்கிழமை மாலை Esternay (Marne) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நுழைந்த காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர்.
GIGN ஜொந்தாம் அதிரடிப்படையினர் நேற்று மார்ச் 29, சனிக்கிழமை மாலை வீடொன்றுக்கு அழைக்கப்பட்டனர். வீட்டின் கதவு பூட்டப்பட்டதை அடுத்து ஜொந்தாமினர் கதவை உடைத்து திறந்தனர். அதன் போது கதவின் பின்னால் மறைந்திருந்த வயது முதிர்ந்த ஒருவர் கைகளில் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு கொந்தாமினரை தாக்க முற்பட்டார்.
அவரை மடக்கிப்பிடித்து கைது செய்ய ஜொந்தாமினர், அதன் பின்னர் வீட்டுக்குள் நுழைந்த போது, பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் உறைந்து இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் முன்னதாக 2012 ஆம் ஆண்டு குடும்ப வன்முறை காரணமாக சிறை சென்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan