ஒரே இரவில் இரண்டு மீட்பு பணிகள் - 47 அகதிகள் கடலில் மீட்பு!!
26 பங்குனி 2025 புதன் 17:00 | பார்வைகள் : 5055
இரண்டு வெவ்வேறு மீட்புப்பணிகளில் 47 அகதிகள் கடலில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று மார்ச் 25, செவ்வாய்க்கிழமை இரவு அகதிகள் பலர் பிரான்சில் இருந்து கடல்மார்க்கமாக பிரித்தானியா செல்ல முற்பட்டனர். முதலில் 19 அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு ஒன்று இயந்திரக்கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளிக்க அவரக்ளை CROSS அதிகாரிகள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
அதன் பின்னர் 28 அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த மற்றொரு படகினை கடற்படையினர் தடுத்து நிறுத்தனர். அவர்களும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
சென்ற 2024 ஆம் ஆண்டு இதுபோன்ற கடற்பயணங்களினால் 78 அகதிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan