Paristamil Navigation Paristamil advert login

பரிசில் இருந்து 27 அகதிகள் நாட்டை விட்டு ‘உடனடி’ வெளியேற்றம்!!

பரிசில் இருந்து 27 அகதிகள் நாட்டை விட்டு ‘உடனடி’ வெளியேற்றம்!!

21 பங்குனி 2025 வெள்ளி 11:00 | பார்வைகள் : 5569


பரிசில் இருந்து 27 அகதிகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது. 

பரிசில் உள்ள Gaîté Lyrique அரங்கில் கடந்த நான்கு மாதங்களாக நூற்றுக்கணக்கான அகதிகள் தங்கியிருந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பாக அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டிருந்தனர். மொத்தமாக 150 அகதிகள் வெளியேற்றப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே மோதலும் வெடித்தது.

காவல்துறையினர் மீது மிக மோசமான தாக்குதல்களை அகதிகள் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்களில் 27 அகதிகளுக்கு Obligation to leave French territory - OQTF எனும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்