பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு வகுப்புகள்!
7 மாசி 2025 வெள்ளி 08:43 | பார்வைகள் : 7970
பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் வழங்கப்படும் என தேசிய கல்வி அமைச்சர் (ministre de l'Éducation nationale) அறிவித்துள்ளார்.
பெப்ரவரி 6, நேற்று வியாழக்கிழமை இதனை அமைச்சர் Élisabeth Borne அறிவித்தார். “"AI இன் சார்புகள் மற்றும் வரம்புகள் குறித்து மாணவர்களுக்கு நாம் கல்வி கற்பிக்க வேண்டும்.” என தெரிவித்த அவர், இது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு புரட்சி, நமது கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் உட்பட அனைத்தையும் உலுக்கி வருகிறது. தேசிய கல்வி அதைப் இணைத்துக்கொள்கிறது!” என தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டின் புதிய வகுப்புகள் ஆரம்பமாகும் போது, அதில் இந்த A.I வகுப்புகள் இணைத்துக்கொள்ளப்படும் எனவும், 4 ஆம் மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயமானதாகவும், நடுத்தர வகுப்பினருக்கு விருப்பத்தின் பேரில் கற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan