Coupe de France : தீவிர விற்பனையில் போலி நுழைவுச் சீட்டு.. ஏமாற வேண்டாம்!!
30 தை 2025 வியாழன் 09:54 | பார்வைகள் : 11756
'பிரெஞ்சுக் கிண்ணம்' Coupe de France உதைபந்தாட்ட போட்டிகள் முழு மூச்சாக இடம்பெற்று வருகிறமை அறிந்ததே. பெப்ரவர் 4 ஆம் திகதி PSG எதிர் Le Mans FC அணிகளுக்கிடையே போட்டி இடம்பெற உள்ளது.
இந்த போட்டிக்கான நுழைவுச் சீட்டுகள் பெறுவதில் பெரும் போட்டி நிலவுவதால், வழக்கமான தொகையை விட பல மடங்கு அதிக தொகைக்கு விற்பனை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. €46 யூரோக்களுக்கு வாங்கப்பட்ட நுழைவுச் சிட்டைகளை €250 யூரோக்கள் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலர் விளம்பரப்படுத்துவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவற்றில் பல விளம்பரங்கள் போலியானவை எனவும், போலி நுழைவுச் சிட்டைகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த போலி நுழைவுச் சிட்டைகள் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan