இணைக்கப்பட்ட உக்ரேனிய பகுதிகளை திருப்பித்தர முடியாது- ரஷ்யா
28 மாசி 2025 வெள்ளி 08:40 | பார்வைகள் : 4438
உக்ரைனின் இணைக்கப்பட்ட பகுதிகளை, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் திருப்பித்தர முடியாது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் மூன்றாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், ஜெலென்ஸ்கியும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் அடுத்த வாரம் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யா தான் இணைத்துக் கொண்டதாகக் கூறும் உக்ரேனியப் பகுதிகளின் கட்டுப்பாட்டைக் கைவிடுவதை நிராகரித்துள்ளது.
இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "எங்கள் நாட்டின் அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள ரஷ்ய கூட்டமைப்பின் பகுதிகளாக மாறியுள்ள பிரதேசங்கள், எங்கள் நாட்டின் பிரிக்க முடியாத பகுதியாகும்.
இது மறுக்க முடியாதது மற்றும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல" என்று தெரிவித்தார்.
டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய நான்கு உக்ரேனியப் பகுதிகளை முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு இணைப்பதாக ரஷ்யா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan