விவசாயக் கண்காட்சியில் இருந்து €30,000 யூரோக்கள் மதிப்புள்ள நாய்கள் திருட்டு!!

27 மாசி 2025 வியாழன் 16:00 | பார்வைகள் : 3272
பரிசில் இடம்பெற்று வரும் விவசாயக் கண்காட்சியில் இருந்து விலையுயர்ந்த மூன்று நாய்கள் திருடப்பட்டுள்ளன.
Eure-et-Loir மாவட்டத்தைச் சேர்ந்த நாய் விற்பனையாளர் ஒருவர் குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்த வைத்திருந்த நாய்களே திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Texane, German Shepherd ஆகிய இரு இன நாய்களே திருடப்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பு €30,000 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் 15 ஆம் வட்டார காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை அவை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.