இரண்டு மாதங்களின் பின்னர் பரிசில் உள்ள ஏழு சூதாட்ட விடுதிகள் திறப்பு!!
26 மாசி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 6917
கட்டாயத்தின் பேரில் மூடப்பட்டிருந்த ஏழு சூதாட்ட விடுதிகள், இரண்டு மாதங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
பரிசில் உள்ள சூதாட்ட விடுதிகள் கடந்த ஜனவரி 1 ஆம் திகதி (2025) மூடப்பட்டிருந்தன. 2008 ஆம் ஆண்டு ஐரோப்பிய பாரளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட 'சட்டமன்ற கட்டமைப்புச் சட்டம்' (ஆங்கிலத்தில் : New Legislative Framework) சட்டத்தின் மூலம் இந்த விடுதிகள் மூடுவதற்கு பணிக்கப்பட்டிருந்தது. வருமானத்தை சரியாக கணக்கு காண்பிக்கவில்லை உள்ளிட்ட நிர்வாக முறைகேடுகளைக் கண்காணிக்க இந்த சட்டம் உதவுகிறது.
இந்நிலையில், இரு வாரங்களின் பின்னர் வரும் வாரங்களின் பின்னர் மார்ச் 1 ஆம் திகதி அவை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை வர்த்தமானி வெளியிட்டுள்ளது.
இந்த சூதாட்ட விடுதிகள் மூடப்பட்டிருந்ததை அடுத்து, 1,500 பேர் வரை பகுதிநேர வேலை வாய்ப்பை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan