ரஷ்யா, வட கொரியாவிற்கு எதிராக புதிய தடைகள் - பிரித்தானியா அரசு
24 மாசி 2025 திங்கள் 17:58 | பார்வைகள் : 8229
ரஷ்யா மற்றும் வட கொரியாவிற்கு எதிராக புதிய தடைகளை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய தடைகள் அறிவிப்பிற்கு பின்னர், பிரித்தானிய அரசு ரஷ்யா மற்றும் வட கொரியாவிற்கு எதிராக 107 புதிய தடைகளை அறிவித்துள்ளது.
இந்த தடைகள் ரஷ்யாவின் போர்க்கலன் தயாரிப்பு சங்கிலிகள், புடினின் போரை நிதியளிக்கின்ற வருவாய் நிலைகள் மற்றும் கிரெம்லினுக்கு ஆதாயம் தேடும் தனியார் நபர்கள் ஆகியோருக்கு எதிராக அமுல்படுத்தப்படுகின்றன.
• ரஷ்ய இராணுவத்திற்கான இயந்திரங்கள் மற்றும் மின்னணு பொருட்களை வழங்கும் நிறுவனங்கள்.
• வட கொரிய பாதுகாப்பு அமைச்சர் நோ க்வாங் சோல் (No Kwang Chol) மற்றும் 11,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்ப உதவிய அதிகாரிகள்.
• LLC Grant-Trade நிறுவனர் Marat Mustafaev மற்றும் அவரது சகோதரி Dinara Mustafaeva. உயர்தர ஐரோப்பிய தொழில்நுட்பங்களை ரஷ்யாவிற்கு கடத்தியதாக பிரித்தானியா இவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளது.
2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து, பிரித்தானியா மொத்தம் 2,000 தடைகளை அமுல்படுத்தியுள்ளது.
இதன் மூலம் தடைக்குள்ளானவர்கள் பிரித்தானியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கவும், வர்த்தகம் செய்யவும், நுழையவும் முடியாது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan