மொஹமத் அம்ரா - தொடர் கைதுகள்!
23 மாசி 2025 ஞாயிறு 11:29 | பார்வைகள் : 8324
வேறு சிறைக்கு மாற்றப்படும் வேளை, முiறாயன தகவற் பரிமாற்றம் இன்றிக் கொண்டு செல்லப்பட்டு, நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் வைத்து, ஒரு ஆயுதக் குழுவினால் பெரும் தாக்குதல் நடாத்தித் தப்பிக்கவைத்த பெரும் குற்றவாளி மொஹமத் அம்ரா, ஒன்பது மாதத் தேடுதலின் பின்னர் ருமேனியாவிவ் கைது செய்யப்பட்டு பிரான்சிடம் ஒப்படைக்கப்படுகின்றார்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவிற்கும் இன்று அதிகாலைக்கும் இடையில் இவன் தப்பிச் செல்ல உதவிய, அதனுடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சிலும், ஸ்பெயினிலும் இந்தக் கைதுகள் நடந்துள்ளன.
திட்டமிடப்பட குற்றங்களின் மத்திய தடுப்புப் பிரிவினரான OCLCO (office centrale de lutte contre le crime organisé) இன் தீவிர நடவடிக்கையில் இந்தப் பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan