மூன்று மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை!!

18 மாசி 2025 செவ்வாய் 06:53 | பார்வைகள் : 4608
இன்று பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை வெள்ள அனர்த்தம் காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Somme, Oise மற்றும் Aisne ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் நண்பகலுக்குப் பின்னர் பலத்த மழை பெய்யும் எனவும், வீதிகளை மூடி வெள்ளம் பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அம்மூன்று மாவட்டங்களுக்கும் 'மஞ்சள்' நிற எச்சரிக்கையை Météo France விடுத்துள்ளது. அதேவேளை அங்கு -2°C வரை குளிர் நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.