அவள் ஆடுகின்றாள்

13 மாசி 2025 வியாழன் 15:49 | பார்வைகள் : 2860
கதிரவனின் ஒளி வந்து உமிழுமுன்
இருண்ட மரங்களின் அசைவுகள் சூழ்ந்திருக்க
பேச்சரவமின்றி சூழல் அமைதியுற்றிருக்க
நவீன பூங்காவின் மத்தியிலே
சீரற்று கிடக்கும் மேடை தளத்திலே
தனியாய் ஓர் நிழலுருவம்
அவள் ஆடுகின்றாள்
கைகளை மேலுயர்த்தி ஒன்று சேர்த்து
ஓங்கார வடிவமாய் நிற்கின்றாள்
மதியென்னும் பொருளியந்து
காலத்தின் இருப்பை உணராது
தன் என்னும் பாரத்தை வெளி யெங்கும்
இறக்கி விட்டு அவள் ஆடுகின்றாள்
இலைகளின் மறைவில் ரீங்காரமிடும்
காக்கை குருவிகளின் இசை யொலியினிலே
சலங்கையில்லா அவள் பாதம் மண்தொட்டு
பின் காற்றில் அளவளாவ அவள் ஆடுகின்றாள்
யாரும் கவனியேல் என்றந்த சிற்றிடை
நெளிவதும் மறைவதுமாய்
அவள் ஆடுகின்றாள்
யாராகி இவள் ஆடுகின்றாள்
கலை வேராய் தன்னையே மாற்றுகின்றாள்
முத்திரை ஒவ்வொன்றாய் காட்டுகின்றாள்
அதில் ஆதவன் தன் கதிரை வீசுகின்றான்
வெளியெங்கும் வெளிச்சம் பரவ
மஞ்சள் பூக்களின் மத்தியில் அவள் ஆடுகின்றாள்
புருவங்கள் நெளிய
கன்ன தசைகளும் நடுங்கிட
கண்டேன் அவள் முகம்
கலைகளின் பிரதிநிதியாய்
அக இன்பத்தின் ஆதாரமாய்
உலக இயக்கத்தின் ஒரே காரணமாய்
அவள் கண்கள் மிளிரியது
உள்ளத்தால் மெச்சியே
தொலைவிலேயே தரிசிக்கின்றேன்
அவள் ஆடுகின்றாள்
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1