Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இஸ்ரேலுக்கு மீண்டும் ஆயுத ஏற்றுமதி - ஜெர்மன் அரசு ஒப்புதல்

இஸ்ரேலுக்கு மீண்டும் ஆயுத ஏற்றுமதி - ஜெர்மன் அரசு ஒப்புதல்

29 மார்கழி 2024 ஞாயிறு 14:24 | பார்வைகள் : 6428


ஜெர்மன் அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு இறுதியில் இஸ்ரேலுக்கு புதிதாக 30 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுத ஏற்றுமதிகளை அனுமதித்துள்ளது என்று Spiegel செய்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்திய ஜெர்மன் அரசாங்கம், இப்போது இம்முடிவை எடுத்துள்ளது. 

2024 ஆம் ஆண்டில் ஜெர்மனி மொத்தமாக 160 மில்லியன் யூரோக்களுக்கு மேற்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்திய ஜெர்மன் அரசாங்கம், இப்போது இம்முடிவை எடுத்துள்ளது. 

2024 ஆம் ஆண்டில் ஜெர்மனி மொத்தமாக 160 மில்லியன் யூரோக்களுக்கு மேற்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

பீரங்கிகள் மற்றும் டாங்கி வெடிமருந்துகள் போன்ற சில ஆயுத விநியோகத்துக்கு ஜெர்மனி ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட Merkava டாங்குகள் மற்றும் Renk நிறுவனம் தயாரித்த சில புதிய அமைப்புகள் போன்றவை அனுமதிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களை பின்பற்றும் என்று உறுதிமொழி வழங்கப்பட்ட பிறகே ஜெர்மனிய அரசு இந்த ஏற்றுமதிகளை அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில், ஜெர்மனிய பொருளாதார அமைச்சகம் பல்கலைக்கழக வழக்குகளின் காரணமாக இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியது. 

இந்த விவகாரம் ஜெர்மனியின் ஆயுத கொள்கைகள் மற்றும் சர்வதேச கருத்துக்கள் மீது புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்