Paristamil Navigation Paristamil advert login

பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்து விபத்து...!  8 பேர் பலி

பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்து விபத்து...!  8 பேர் பலி

28 மார்கழி 2024 சனி 10:11 | பார்வைகள் : 5725


பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்ததுடன் 9 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பிரேசிலில் உள்ள டோகன்டின் ஆற்றின் மீது இருந்த பாலம் கடந்த 22ம் திகதி இடிந்து விழுந்தது. 

இதன்போது அந்த பாலத்தில் 3 லாரிகள், பல இரு சக்கர வாகனங்கள் மற்றும் குறைந்தது 2 கார்கள் ஆற்றில் விழுந்தது.

இதையடுத்து அங்கு கடற்படை, சார் மற்றும் மீட்புக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றில் விழுந்த 3 லாரிகளில் இரண்டில் கந்தக அமிலம் இருந்ததால், அப்பகுதியில் உள்ள 19 நகராட்சிகளில் குடிநீரை பயன்படுத்த அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்