பரிசில் 15 வயதுச் சிறுவன் கொலை! கொலையாளிச் சிறுவர்கள் கைது!!

26 தை 2025 ஞாயிறு 11:15 | பார்வைகள் : 4123
நேற்று சனிக்கிழமை இரவு 20h00 மணியளவில் தனது உதைபந்தாட்டப் பயிற்சியை முடித்துத் திரும்பிக்கொண்டிருந்த ஒரு 15 வயதினனை, இருவர் மடக்கி அவனின் கைப்பேசியை பறிக்க முயன்றுள்ளனர்.
கைத்தொலைபேசியை கொடுக்க மறுத்ததால் அவனைக் கத்தியால் குத்தி உள்ளனர். அவனுடன் வந்த நண்பன் உடனடியாக அவசர சிகிகச்சைப்பிரிவை அழைக்க, அவர்கள் முயற்சி செய்தும் பலனில்லாமல் இந்தப் 15 வயதுச் சிறுவன் சாவடைந்துள்ளான்.
இந்தச் சம்பவம் நேற்று 20h00 மணியளவில் பரிசின் 14வது வட்டாரத்தில் நடந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இரு பதின்மவயதுச் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.