விஷால் - சுந்தர் சி மீண்டும் கூட்டணி?
22 தை 2025 புதன் 10:55 | பார்வைகள் : 4718
2025ம் ஆண்டு பொங்கல் படங்களில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. 12 வருடங்களாகத் தேங்கி நின்ற படமான 'மத கஜ ராஜா' படம் வெளிவந்து வரவேற்பைப் பெற்று 50 கோடி வசூலை நெருங்கி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில், விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சமி மற்றும் பலர் அப்படத்தில் நடித்திருந்தார்கள்.
சுந்தர் சி - விஷால் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 'மத கஜ ராஜா' படத்தின் வெற்றிதான் அதற்குக் காரணம். 'ஆம்பள, மத கஜ ராஜா, ஆக்ஷன்' ஆகிய மூன்று படங்களில் இணைந்த கூட்டணி மீண்டும் நான்காவது முறையாக இணைய உள்ளது. அந்தப் படமும் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என்று தெரிகிறது. அது குறித்த பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
'துப்பறிவாளன் 2' படத்தை தயாரித்து, இயக்கி நடிக்க உள்ளார் விஷால். அப்படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்த வேண்டும். அதற்கு சில மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. கவுதம் மேனன், அஜய் ஞானமுத்து ஆகியோரின் இயக்கத்திலும் விஷால் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
சுந்தர் சி தற்போது 'கேங்கர்ஸ்' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் வடிவேலு அவருடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan