சீனாவில் கொடூர விபத்தை ஏற்படுத்திய நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
20 தை 2025 திங்கள் 15:44 | பார்வைகள் : 6131
சீனாவில் கடந்த வருடம் நவம்பரில் பொதுமக்கள் மீது காரைமோதி 35 பேரை கொலை செய்த நபருக்கு விசரணையின் அடிப்படையில் சீனா மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.
மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்றுவாரங்களின் பின்னர் பான்வெய்கியுவிற்கு சீன அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த நவம்பரில் பல்கலைகழக வளாகமொன்றில் எட்டுபேரை கத்தியால் குத்தி கொலை செய்தநபருக்கும் வுக்சி என்ற நகரில் அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
இவர்களிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை சீனாவின் சமூக ஊடக தளமான வெய்போவில் பலரும் வரவேற்றுள்ளனர்.வெய்போவில் இந்த மரணதண்டனை டிரெண்டிங்காக மாறியுள்ளது.
எவ்வளவு திருப்தியாக உள்ளது என ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏனையவர்களும் இதேபோன்ற கருத்தினை வெளியிட்டுள்ளனர்.
சீனாவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள் உட்பட பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
இது குறைந்தளவு வன்முறைகள் மற்றும் அதிகளவு கண்காணிப்பிற்கு பழகிப்போன மக்களை அச்சுறுத்துகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan