Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

எத்தனால் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து மக்காச்சோளத்தில் அதிக ஆராய்ச்சி

எத்தனால் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து மக்காச்சோளத்தில் அதிக ஆராய்ச்சி

15 தை 2025 புதன் 02:32 | பார்வைகள் : 6602


பயோ எத்தனால் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து மக்காச்சோளத்தில் அதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,'' என கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:

விவசாயிகள் வளர்ச்சி, மேம்பாட்டுக்காக பல்கலை எப்போதும் துணை நிற்கிறது. இன்று உணவு உற்பத்தி, 32.50 கோடி டன்னாக உள்ளது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து, ஏற்றுமதி செய்யும் வல்லரசு நாடாக உள்ளோம்.

இதில் வேளாண் பல்கலையின் பங்கு முக்கியமானது. 900க்கும் மேற்பட்ட ரகங்களை கண்டறிந்துள்ளோம். இதில், 138 ரகங்கள் இன்றும் விதைச்சங்கிலியில் உள்ளன. குறைந்த வயது, நல்ல விளைச்சல், பருவகால மாற்றத்துக்கு ஏற்றதாக இருக்கும் வகையில், புதிய ரகங்கள் கண்டறியப்படுகின்றன. பல்கலையின், 1500 தொழில்நுட்பங்களில், 500 க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சி, நோய்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்திக்கிறோம்.

பல்கலையில், மக்காச்சோளம் வாயிலாக எத்தனால் தயாரிப்புக்காக, பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மக்காச்சோளத்தில் சாறு அதிகம் இருக்குமாறு, புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பயோ எத்தனால் தயாரிப்புக்கு, முக்கியத்துவம் அளித்து மக்காச்சோளத்தில் அதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

பல்கலைக்கழக பயிர் மேலாண்மை இயக்குனர் கலாராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்