Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

இலங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

29 கார்த்திகை 2024 வெள்ளி 09:39 | பார்வைகள் : 5408


கலாஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்று (29) காலை   தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன், அப்பகுதிகளை கடந்து செல்லும் வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் நீர்ப்பாசன திணைக்களம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்