பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் நடைபெற்ற கனகபுரம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்

27 கார்த்திகை 2024 புதன் 13:29 | பார்வைகள் : 8814
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் கனகபுரம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்காக வருடாந்தம் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
நவம்பர் 21 முதல் மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 27 துயிலும் இல்லங்களில் மாலை 6.05 இடம்பெறும் சுடர் ஏற்றும் நிகழ்வுடன் நிறைவுபெறும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025