கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா?
26 கார்த்திகை 2024 செவ்வாய் 11:54 | பார்வைகள் : 6272
கன்னடத் திரையுலகத்தில் 2021ல் திரைப்படம் தயாரிக்க வந்து தற்போது விஜய்யின் 69வது படத்தைத் தமிழில் தயாரித்துக் கொண்டிருக்கும் நிறுவனம் கேவிஎன் புரொடக்ஷன்ஸ். “சாகத், பை 2 லவ், கேடி - த டெவில்” ஆகிய படங்களை கன்னடத்தில் தயாரித்துள்ளார்கள். அடுத்து 'கேஜிஎப்' யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்தை கன்னடத்தில் தயாரித்து வருகிறார்கள்.
இந்நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கில் உள்ள சில முன்னணி நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது. அடுத்தடுத்து அவர்களை வைத்து புதிய படங்களைத் தயாரிக்க உள்ளார்களாம்.
கன்னடத்தில் “முப்டி, பைரதி ரணகல்” ஆகிய படங்களை இயக்கிய நார்தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய அடுத்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்றும் அதில் நாயகனாக நடிக்க ராம் சரண், சூர்யா அல்லது கன்னட ஹீரோ என யாரை நடிக்க வைக்கப் போகிறோம் என்பதற்கான ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்நிறுவனத்தின் படம் ஒன்றில் நடிக்க சூர்யா அட்வான்ஸ் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
'கேஜிஎப்' படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத் தயாரிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பே சூர்யா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இரண்டு வருடங்களாகியும் அது இன்னும் நடக்கவில்லை.
சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க ஆரம்பித்த பின்புதான் சூர்யாவின் 46வது படம் எது எனத் தெரிய வரும். ஏற்கெனவே 'வாடிவாசல்' படமும் அறிவிப்போடு அப்படியே இருக்கிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan