இலங்கையில் நாளை முதல் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை

21 கார்த்திகை 2024 வியாழன் 12:47 | பார்வைகள் : 4409
2024 ஆம் ஆண்டில், அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் 2024 நவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் 2024 டிசெம்பர் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் மற்றும் அன்றைய திகதிக்குப் பிறகு பாடசாலை விடுமுறைகள் தொடங்கும்.
அனைத்துப் பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025 ஜனவரி 02 மீண்டும் தொடங்கும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025