அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து... 8 பேர் பலி....!

21 மார்கழி 2024 சனி 14:31 | பார்வைகள் : 4490
கிரீஸ் நாட்டில் அமைந்துள்ள ரோட்ஸ் தீவு அருகே கடற்பகுதியில் அகதிகள் பயணம் செய்த படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளது.
8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரோந்து படகு நெருங்கி வருவதை அறிந்து தப்பிக்க முயற்சிக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கடலோர காவற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் தவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு படையினர் வந்து சேர்ந்தனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், இந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேலும் சிலர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், அவர்களை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025