காபாவில் பரபரப்பாக நடந்த ஆட்டம்..மழையால் டிராவில் முடிந்த டெஸ்ட்
18 மார்கழி 2024 புதன் 08:46 | பார்வைகள் : 3687
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது.
காபாவில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி நடந்தது.
முதலில் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 445 ஓட்டங்களும், இந்தியா 260 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் 275 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது.
இந்திய அணி 2.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை நீடித்ததால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
152 ஓட்டங்கள் விளாசிய அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (Travis Head) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan