Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இலங்கையின் படுதோல்வி தொடர்பில் சனத் ஜெயசூரியா

இலங்கையின் படுதோல்வி தொடர்பில் சனத் ஜெயசூரியா

11 மார்கழி 2024 புதன் 12:10 | பார்வைகள் : 6886


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுவதுமாக இழந்தது.

இதனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் இலங்கையின் கனவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூரியா (Sanath Jayasuriya) தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசியுள்ளார். 

அவர் கூறுகையில், "துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் ஸ்கோரை சதங்களாக மாற்ற வேண்டும்; 30 மற்றும் 40 ஓட்டங்கள் போதாது. இந்த விக்கெட்டுகளில் இது கடினமானது, ஆனால் இது போன்ற ஒரு சுற்றுப்பயணத்தில் குறைந்தது இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் சதம் அடிக்க வேண்டும். நாங்கள் அதைப் பெறவில்லை. எங்களுக்கு கிடைத்ததெல்லாம் இரண்டு 80 ஓட்டங்கள்தான்" என தெரிவித்தார்.    
 

வர்த்தக‌ விளம்பரங்கள்